இனப்பிரச்சினை தொடர்பான பேச்சு: அடுத்த மாதம் கொழும்பில் கூடுகின்றன தமிழ்க் கட்சிகள் !

இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடவுள்ளன. அதன்படி எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கடந்த கலந்துரையாடல் அவசர அவசரமா இடம்பெற்ற நிலையில் இம்முறை அனைவரையும் அழைத்து கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.